ATM மெஷினில் உங்களது ஏடிஎம் கார்டு சிக்கிக் கொண்டதா? உடனே இதை செய்தால் போதும்
நாம் பணம் எடுப்பதற்கு பயன்படுத்தும் ATM Card ஏடிஎம் இயந்திரத்தில் மாட்டிக்கொண்டால் அதனை எவ்வாறு மீட்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ATM பணபரிவர்த்தனை
இன்றைய காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகியுள்ளதால், பெரும்பாலான வேலைகளை நாம் அமர்ந்த இடத்திலேயே செய்து முடித்துவிடுகின்றோம்.
பொருட்கள் வாங்குவது, பணம் எடுப்பது என அனைத்தையும் எங்கும் அலைந்து திரியாமல் மிகவும் சுலபமாக செய்துவரும் நிலையில், பணம் எடுக்கும் ஏடிஎம் மெஷினில் நாம் உள்ளே போடும் கார்டு சிக்கிக் கொண்டால் என்ன செய்வது என்பது பெரும்பாலான நபர்களுக்கு தெரிவதில்லை.

மேலும் மற்றவர்களையும் இத்தருணத்தில் நம்புவதற்கும் நாம் அதிகமாகவே யோசிப்போம். அவ்வாறான தருணத்தில் நாம் செய்ய வேண்டியதைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
ஏன் ஏடிஎம் இயந்திரத்தில் சிக்கிக் கொள்கின்றது?
இயந்திரத்தின் தொழில்நுட்பக் கோளாறு அல்லது இணைய இணைப்பு சிக்கல் இவைகள் முதன்மை காரணமாக இருக்கின்றது.
பயனாளர் தனது கார்டு நம்பரை தவறாக பதிவு செய்தல், பரிவர்த்தனையின் போது நீண்ட நேரம் அட்டையை எடுக்காமல் இயந்திரத்திற்குள் வைப்பது, இக்காரணத்தினால் இயந்திரம் நமது கார்டை தக்க வைத்துக் கொள்ளுமாம்.

பணம் எடுக்கும் போது மின் அழுத்த மாறுபாடு ஏற்படுதல் அல்லது இயந்திரத்தின் மென்பொருளில் தொழில்நுட்ப பிழைகள் ஏற்பட்டால் இயந்திரத்திற்குள் டெபிட் கார்டு சிக்கிக் கொள்ளும்.
சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்?
இவ்வாறான தருணங்களில் உங்களது ஏடிஎம் கார்டு சிக்கிக் கொண்டால் பதற்றமடைய தேவையில்லை. உங்களது பணம் மற்றும் டெபிட் கார்டு இரண்டும் பாதுகாப்பாகவே இருக்கும்.
இயந்திரத்தில் போடப்பட்டுள்ள அட்டை திரும்ப வரவில்லையெனில் அந்த நொடியில் உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தினை தொடர்பு கொள்ளவும்.
மேலும் குறிப்பிட்ட ஏடிஎம் அமர்ந்திருக்கும் இடத்தையும், அட்டை சிக்கிக் கொண்ட நேரத்தினையும் வங்கிக்கு தெரிவிக்கவும்.

ஒவ்வொரு ஏடிஎம் இயந்திரத்திலும் ஒரு தனித்துவமான அடையாள எண் (ID number) காணப்படும், அந்த எண்ணையும் வங்கியில் கொடுக்கவும்.
வாடிக்கையாளர் சேமை மையத்தில், உங்களது அட்டையை பிளாக் அல்லது ஹாட்லிஸ்ட் செய்வது மிகவும் பாதுபாப்பானதாக இருக்கும். இதன்மூலம் உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும்.
வங்கியில் இரண்டு விருப்பங்களை உங்களுக்கு கொடுப்பார்களாம். ஒன்று தற்போதுள்ள கார்டு செலிழப்பு செய்து புதிய அட்டைக்கு விண்ணப்பிப்பது, மற்றொன்று பழைய கார்டையே சரிசெய்து கொடுப்பது என்பதாகும்.

ஆனால் பழைய கார்டு வேண்டுமெனில் அதிகமான நேரம் எடுக்கலாம். ஏடிஎம் இயந்திரத்தினை பராமரிக்கும் பொறுப்புள்ள தொழில்நுட்பக் குழுவினர் மீட்டு அதனை வங்கிக்கு அனுப்பி வைப்பார்கள்.
பின்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுத்து, அடையாள சான்றை உங்களது வங்கி கிளையில் சமர்பிக்க கூறுவார்கள். பின்பு நீங்கள் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |