வித்தியாசமான முறையில் விடுமுறை கேட்ட நபர்!
பொதுவாக நிறுவனங்களில் எல்லாம் ஒரு நாள் மட்டும் தான் விடுமுறை தருவார்கள். அதிலும் ஏதேனம் அவசரத்தேவைகள் என்றால் விடுமுறை எடுப்பதற்கு ஏராளமாக பொய்கள் சொல்லுவது உலக வழக்கம்.
இப்படி இருக்கையில் பத்திரிக்கையாளர் ஒருவரின் லீவ் வெட்டர் தற்போது பார்வையாளர்கள் மத்தியில் ஈர்த்துள்ளது.
விடுமுறைக்கடிதம்

alt news இல் பணியாற்றும் பத்திரிகையாளர் அபிஷேக் குமார் வித்தியாசமான காரணத்தை சொல்லி விடுமுறைக்கேட்டுள்ளார். அபிஷேக் தனது உயர் அதிகாரிக்கு மெயில் மூலம் ஒரு விடுப்பு கேட்டிருக்கிறார்.
அவர் அந்த மெயிலில் குறிப்பிட்டிருந்ததாவது, வீட்டில் ரிலாக்ஸாக pitchers season 2 பார்க்க வேண்டும். ஆகையால் டிசம்பர் 23ஆம் திகதி விடுமுறை தேவைப்படுகிறது.

ஏனெனில், ரொம்ப பிடித்தமான இந்த வெப் சீரிசை வார நாட்களில் வேலையெல்லாம் முடித்துவிட்டு வந்து இரவெல்லாம் கண்விழித்து பார்க்கிறேன். இதனால் என்னுடைய தூக்கம் கலைகிறது.
என்னுடைய வேலைகளை வழக்கம்போல டிசம்பர் 24ம் திகதி தொடர்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த மெயிலை டுவிட்டரிலும் பகிர்ந்த அபிஷேக் குமார்.
விடுமுறையை சாதாரணமாக்குங்கள், நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது நீங்கள் இல்லாமல் வேலை நடக்காது என்ற போது மட்டும் விடுமுறை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பதிவிட்டிருக்கிறார்.
இந்த டுவிட்டர் பதிவிற்கு இணையவாசிகள் பலர் ஆதரவு தெரிவித்தும் சிலர் மீம்ஸ் கெிரியேட் செய்தும் வருகின்றனர்.
Normalise leave. ?
— Abhishek (@AbhishekSay) December 22, 2022
It is not necessary that you take leave only when you are sick or for some work that cannot be done without you. pic.twitter.com/rIdCJAJxHN