தாலி கட்டிய மனைவியை தொட்டு கூட பார்க்க முடியாமல் கதறி அழும் அருண்ராஜா காமராஜ்! நேரில் சென்ற உதயநிதி ஸ்டாலின்
தமிழ் திரை உலகில் பல்வேறு விதமான திறமைகளை வளர்த்துக் கொண்டு சிறப்பாக பயணித்து வரும் பிரபலங்களில் அருண்ராஜா காமராஜாவும் ஒருவர்.
அவரின் மனைவி கொரோனாவால் நேற்று உயிரிழந்தார். தாலி கட்டிய மனைவியை தொட்டு கூட பார்க்க முடியாமல் கதறி அழும் அருண்ராஜா காமராஜின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரையும் சோகத்தில் உறையவைத்திருந்தது.
இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் மற்றும் அவருடைய மனைவி சென்னை தனியார் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவர்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்தார் என செய்திகள் வெளிவந்துள்ளது.
அது மாத்திரம் நேற்றைய தினம் உதயநிதி ஸ்டாலின் சிந்துஜாவின் உடலுக்கு கண்ணீருடன் தனது இறுதி மரியாதையை செய்துள்ளார்.
நேர்த்தியான இயக்குனர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் @Arunrajakamaraj அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/YUvMpwQCSb
— Udhay (@Udhaystalin) May 17, 2021
இது குறித்த புகைப்படங்களை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள உதயநிதி ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,
நேர்த்தியான இயக்குனர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்’ என்று பதிவு செய்துள்ளார்.