கெனிஷாவுடன் நெருக்கம் காட்டும் ரவி மோகன்... ஆர்த்தி ரவியின் அதிரடி பதிவு!
விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் ஆர்த்தி ரவி வெளியிடும் ஒவ்வொரு பதிவும் இணையத்தில் அதிகளவாக கவனம் ஈர்த்து வருகின்றது. இந்நிலையில்,நான் அதைப் பார்க்கும் விதம்... என குறிப்பிட்டு தற்போது ஆர்த்தி ரவி ஒரு நீண்ட பதிவுடன் வெளியிட்டுள்ள மாஸ் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
ரவி மோகன்- ஆர்த்தி ரவி
ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் 2024 ஆம் ஆண்டு அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.விரைவில் சட்டப்படி விவாகரத்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் ஆர்த்தி ரவியுடன் தான் வளர்கின்றார்கள்.

ஆர்த்தியுடனான பிரிவுக்கு பின்னர் ரவி மோகன் கெனிஷாவுடன் அதிக நெருக்கம் காட்டிவரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாக இருந்துவருகிறார்.

சமீபத்தில் பாடகி கெனிஷாவின் பிறந்த நாளுக்கு பூங்கொத்து கொடுத்து ரவி மோகன் நெருக்கமான முறையில் வாழ்த்து தெரிவித்திருந்தார். குறித்த புகைப்படங்களை கெனிஷா வெளியிட இணைத்தில் வைரலானது.
ஆர்த்தி ரவியின் புதிய பதிவு
ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் கடினமான சூழ்நிலைகளையும் ஆர்த்தி ரவி நிதானத்துடன் கடந்து வருகின்றார்.தனது மன அமைதிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் அதைப் பார்க்கும் விதம்... நான் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது என்ன பகிர்ந்து கொள்கிறேன் என்பதில் கவனமாக இருக்கிறேன். அது ரகசியம் அல்ல, அது வளர்ச்சி... என குறிப்பிட்டு ஒரு நீண்ட பதிவுடன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |