மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்.... 3 மாதத்திற்கு பின்பு கண்ணீர் சிந்திய கொடுமை
மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர் தற்போது சிகிச்சைக்கு பின்பு மகள்களை நினைத்து கண்ணீர் சிந்தியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், மதனபள்ளியில் உள்ள சிவா நகரில் வசித்து வருபவர் புருஷோத்தம். இவரது மனைவி பத்மஜா. புருஷோத்தம் நாயுடு, பெண்கள் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.
பத்மஜா, தனியார் பள்ளியின் தாளாளராக உள்ளார். இந்த தம்பதிக்கு, அலேக்யா, 27, சாய் திவ்யா, 22, என, இரு மகள்கள் இருந்தனர். அலேக்யா, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.
சாய் திவ்யா, எம்.பி.ஏ., படித்து முடித்து, ஏ.ஆர்.ரகுமான் இசை கல்லுாரியில் இசை பயின்று வந்துள்ளார். இவர்கள் தாங்கள் கட்டிய புதிய வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வசித்த வந்த நிலையில், கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு போட்டதால் வீட்டிலேயே இந்தனர்.
அப்பொழுது தங்களது வீட்டில் அற்புதங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஜனவரி மாதம் தங்களது இரண்டு மகள்களையும் அரை நிர்வாணமாக பலியிடுவதாக கொலை செய்துள்ளனர்.
கொலை செய்துவிட்டு தங்களது மகள்கள் மீண்டும் உயிர் பெற்றுவருவார்கள் என்ற நம்பிக்கையில் தம்பதிகள் இவ்வாறு செய்துள்ளனர்.
பின்பு கைது செய்யப்பட்ட இவர்களுக்கு 3 மாதங்கள் மனநிலை மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின்பு தற்போது இவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதுடன், தனது இரண்டு மகள்களை இவ்வாறு அநியாயமாக கொலை செய்துவிட்டதாக மனம் வருந்தியுள்ளனர்.
தற்போது நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ள நிலையில், இருவரும் சிறையிலிருந்து வெளியேறியதும், தங்களது சொந்த ஊரில் இருக்கும் வீட்டிற்கு உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர். நரபலி கொடுத்த வீட்டிற்கு சென்றால் மகள்களின் ஞாபகம் வரும் என்பதால் தங்களது சொந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.
மூடநம்பிக்கையால் தனது மகள்களை அநியாயமாக கொன்றுவிட்டதாக குறித்த தம்பதிகள் மனம் கலங்கியதாக உறவினர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.