பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மற்றுமொரு நாயகி மாற்றம்! எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நெட்டிசன்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள கதாபாத்திரத்தில் மற்றுமொரு கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸின் கதையம்சம்
சமூகத்தில் ஏற்றால் போல் கதையம்சம் கொண்ட சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதலிடத்தை பிடிக்கிறது.
இந்த சீரியல் அண்ணன், தம்பியின் ஒற்றுமை மற்றும் ஒரு குடும்பத்தில் வரும் முக்கிய தருணங்கள் என்பவற்றை அழகாக சமூகத்திற்கு எடுத்துரைக்கிறது.
மேலும் இந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்த சித்ரா மக்களின் மனதில் ஆழமாக பதிந்த உணர்ந்த கதாபாத்திரமாவார்.
ஆனால் அவர் இறந்த பின்னர் அந்த இடத்தை இது வரை யாரும் நெருங்கவில்லை என்றே கூற வேண்டும்.
கதாபாத்திரத்தில் மாற்றம்
மேலும் முல்லை கதாபாத்திரம், ஐஸ்வர்யா கதாபாத்திரம், ஜனார்த்தனன் கதாபாத்திரம் என நிறைய நடிகர்கள் மாற்றங்கள் நடந்துள்ளது.
இந்நிலையில் முல்லையை அடுத்து இந்த சீரியலில் மீனாவின் தங்கையாக நடிக்கும் ஸ்வேதா கதாபாத்திரம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து, புதிய ஐஸ்வர்யாவாக நடிக்க போகும் நடிகையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் “பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்னும் விறுவிறுப்பாக அமைய போகிறது என எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக” கருத்து பதிவிட்டுள்ளனர்.