இரண்டு வாரங்களுக்கு பகுதி நேர ஊரடங்கு அமல்- அதிரடி உத்தரவு பிறப்பித்த முதல்வர்!
கொரோனா வைரஸ் ஆனது இந்தியாவை ஆட்டிப்படைத்துகொண்டிருக்கிறது. மேலும், ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஒரு நாளைக்கு 23,920 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.
தினமும் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். அம்மாநிலத்தில் ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதனையடுத்து, ஆந்திராவில் மே 5 ஆம் தேதி முதல் நண்பகல் 12 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் உள்ள கடைகள் மற்றும் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
அத்தியாவசியமில்லா கடைகள் நண்பகல் 12 மணிக்கு மேல் இயங்க தடை விதிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கி இரண்டு வார காலத்திற்கு அமலில் இருக்கிறது.
ஊரடங்கு விதிமுறைகளை மக்கள் தவறாது கடைபிடித்து, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.