ஆந்திரா பாணியில் நாவூரும் சுவையில் சிக்கன் 65 ... எப்படி செய்வது?
அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் சிக்கனை பல வகைகளில் சமைக்க முடியும். இது தான் சிக்கனின் சிறப்பம்சமே.
அந்தவகையில் இன்று வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வலையில் விரும்பி உண்ணும் வகையில் அருமையான சுவையில் ஆந்திரா பாணியில் சிக்கன் 65 எப்படி எளிமையான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்லாம்.
தேவையான பொருள்கள்
சிக்கன் (எலும்பு இல்லாதது) - ½ கிலோ
தயிர் - ¼ கப்
கருவேப்பிலை - 2 கொத்து
முட்டை - 1
பச்சை மிளகாய் - 2
கான்ப்ளவர் மாவு - 1 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா தூள் - ½ தே.கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 ½ தே.கரண்டி
சீரகத் தூள் - ¼ தே.கரண்டி
மிளகாய்த் தூள் - 1தே.கரண்டி
மிளகுத் தூள் - ½ தே.கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தே.கரண்டி
எலுமிச்சை - ½ பழம்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை
முதலில் முட்டையை உடைத்து அதன் வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து எடுத்து, அதனுடன் பாதியளவு காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், மற்றும் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலச்துவிட்டுக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கான்ப்ளவர் மாவு, அரிசி மாவு, எலுமிச்சை சாறு, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் சிக்கன் நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் சேர்த்து நன்றாக கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக்கிக்கொள்ள வேண்டும். அதன் பின்பு அடித்து வைத்த முட்டை கலவையுடன் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்களுக்கு நன்றாக ஊறவிட வேண்டும்.
அதன் பின்பு வேறு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தயிர், மீதம் இருக்கும் காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள், மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் மிக்ஸ் செய்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து சூடானதும் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய விட்டு, எண்ணெய் காய்ந்ததும் மசாலாவில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளையும் சேர்த்து அதிகம் சிவக்க விடாமல் பொன்னிறமாக பொரித்து எடுத்து ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து, அதில் கருவேப்பிலை, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, கலந்து வைத்த தயிரையும் அதில் சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்னர் அதில் பொரித்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி நன்கு வேக விட வேண்டும். சிக்கன் நன்றாக வெந்து மசாலா நன்கு சுருண்டு வரும் வரையில் வேகவிட்டு, கடைசியாக கொத்தமல்லி, மற்றும் மிளகுத் தூள் தூவி இறக்கினால் அவ்வளவு தான் ஆந்திரா பாணியில் அசத்தல் சிக்கன் 65 தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |