கருகருவென முடி நீளமாக வளர இந்த தைலம் மட்டும் போதுமே!!
இன்றைக்கு பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி கொட்டுவது.
எத்தனையோ ஹேர் ஆயில்கள் தேய்த்தாலும் முடி கொட்டுவது நிற்கவில்லையே என பலரும் புலம்பக் கேட்டிருப்போம்.
அவர்களுக்கான சூப்பரான நெல்லிக்காய் தைலம் பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவையானவை
பச்சை நெல்லிக்காய்
துளசி இலை
கொட்டை நீக்கிய முற்றின கடுக்காய்
கறிவேப்பிலை
இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்து, நன்றாக அரையுங்கள். இந்த விழுதை மெல்லிய துணியில் மூட்டையாகக் கட்டித் தொங்கவிடுங்கள்.
அதிலிருந்து துளி துளியாக சாறு சொட்டும். இந்த சாற்றினை சேமித்து, இதன் அளவில் மூன்று மடங்கு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுங்கள்.
இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வர முடி கொட்டுவது நின்று, அடர்த்தியாக வளரவும் தொடங்கும்.