வான்வெளியிலும் பயணிக்கும் வித்தியாசமான பாம்புகள்! வியக்க வைக்கும் ஆய்வு தகவல்
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று ஒரு பழமொழி உண்டு அந்தவகையில், பாம்புகள் மீதான பயம் அனைவருக்கும் பொதுவானது தான்.
பாம்புகள் மீது எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ, அதை விட அதிகமான அவற்றை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் மனிதர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றது.

பொதுவாக பாம்புகள் என்றால் தரையில், ஊர்ந்து செல்லும் என்ற கருத்து பெரும்பாலானவர்கள் மத்தியில் நிலவுகின்றது. உண்மையில், சில பாம்புகள் நீரிலும் வான்வெளியிலும் தங்களின் அசாதாரண திறன்களை வெளிப்படுத்துகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம், குறிப்பிட்ட சில பாம்பு இனங்கள் வான்வெளியிலும், ஆழ்கடலிலும் கூட லாவகமாக பயணிக்கின்றது என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றது. இது குறித்த பல சுவாரஸ்யமான விடயங்களையும் விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

வியக்க வைக்கும் பாம்புகள்
Laticauda (Sea kraits) இனப் பாம்புகள், நிலமும் கடலும் இணையும் இடைவெளியில் வாழும் அரிய வகை பாம்புகளாக அறியப்படுகின்றது. மேலும் இந்த வகை பாம்புகள் மிகவும் வீரியம் மிக்க விஷத்தன்மை கொண்டவையாகும். இந்த பாம்புகள் கொண்டுள்ள துடுப்பு போன்ற உடல் அமைப்பு அவை கடலில் வேகமாக பயணிக்க அவற்றுக்கு துணை புரிகின்றது.

பெரும்பாலும் இந்த வகையான பாம்புகள் பவளப்பாறை வளங்களின் அருகே உணவு தேடி அலைகின்றன; இனப்பெருக்கம் மற்றும் ஓய்வு தேவைக்காக மட்டும் கரைக்கு வருகின்றன என்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
வானில் பறக்கும் பாம்புகள் பற்றி கருத்துக்கல் பெரும்பாலானவர்களுக்கு நம்பமுடியாமலும், சற்று வியப்பாகவும் இருக்கலாம் ஆனால், தென்கிழக்கு ஆசியக் காடுகளில் வாழும் Chrysopelea இனங்கள், மரக் கிளைகளுக்கு இடையில் சறுக்கிச் செல்லும் இயல்புளாலேயே பிரபலமாக அறியப்படுகின்றது.

இந்த இனத்தை சேர்ந்த பாம்புகள் உடலின் விலா எலும்புகளை விரித்து தட்டையான வடிவத்தை உருவாக்கி, காற்றில் சாய்வு இயக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் வான்வெளியில் லாவகமாக பயணிக்கின்றது. இந்த இனத்தில் Chrysopelea paradisi எனப்படும் மரப்பாம்பு பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |