என்றுமே பாதுகாத்து வைக்ககூடிய புகைப்படம்: சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் புதிய பதிவு வைரல்!
சீரியல் நடிகை ஆல்யா மானசா, என்றுமே என் வாழ்வில் நான் பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு புகைப்படம் இது என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ஆல்யா மானசா
ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையிலும் ஜெயித்து வருபவர் தான் ஆல்யா மானசா.
ராஜா ராணி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.
இனியா' தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஆல்யா மானசா நடித்துக் வருந்தார். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.
அதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.
இந்நிலையில், தற்போது ஆல்யா மானசா ஜீ தமிழில் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பாரிஜாதம் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் காது கேட்காத நபராக நடிக்கிறார்.
புதிய பதிவு
இந்நிலையில், பாரிஜாதம் தொடரின் தயாரிப்பாளர் நாராயணன் குறித்து ஆல்யா புகைப்படத்துடன் பதிவென்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில் "என்றுமே என் வாழ்வில் நான் பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு புகைப்படம் இது. நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ள பாத்திரத்துக்கு என்னைத் தேர்வு செய்த தயாரிப்பாளர் நாராயணனுக்கு மிகுந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |