ஐஸ்வர்யா ராயை கட்டுக்குள் வைத்து காதல் சித்திரவதை செய்த பிரபல நடிகர்: யார் தெரியுமா?
திருமணத்திற்கு முன் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகரால் காதல் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராய்
உலக அழகியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் அப்போதும் இப்போதும் தமிழ் சினிமாவில் கொண்டாடும் நடிகையாக இருப்பவர். தமிழ் சினிமாவில் மணிரத்தினத்தின் இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
அதற்கு பிறகு சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார்.
மேலும், இவர் தமிழை விட ஹிந்தி படங்களில் தான் அதிக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் சித்திரவதை
எல்லையில்லா அழகுடன் இருந்த ஐஸ்வர்யா ராய் ஹித்தியில் பிரபல நடிகராக நடித்து வந்த சல்மான் கானுடன் திரைப்படம் ஒன்றில் நடித்த வேளையில் அவரும் பழக்கம் ஏற்பட்டிருந்தது.
அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாற இருவரும் சில காலம் காதலித்து வந்தார்கள். அப்போது சல்மான் கான் ஐஸ்வர்யா ராயை எந்த படத்தில் நடிக்க வேண்டும், எந்தப்படத்தில் நடிக்க கூடாது, யாருடன் பேச வேண்டும் என நிறைய விடயங்களில் ஐஸ்வர்யா ராயை முடிவெடுக்க விடாமல் அவரே முடிவெடுத்து வந்தாராம்.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா ராய் சில காலம் படங்களில் நடிக்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தார். அப்போதும் அவரை விடாத சல்மான் கான் அவரின் வீட்டு முன் வந்து பிரச்சனை செய்திருந்தாராம்.
இந்தப் பிரச்சினைகளை எல்லாம் வேண்டாம் என்றுதான் அபிஷேக் பச்சனை காதலித்த திருமணம் செய்திருக்கிறார்.
