இரவில் 11 மணிக்கு மேல் தூங்கும் நபரா நீங்கள்? உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் ஜாக்கிரதை
இரவு 11 மணிக்கு பின்பு தூங்குவதால் உடல் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இரவில் தாமதமாக தூங்கும் பழக்கம் பலருக்கும் இருக்கின்றது. வீட்டு வேலைகள், அலுவலக பணிகள், மொபைல் போன், சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துதல் என பல காரணங்களை கூறுகின்றனர்.
இதனால் இரவில் 12 அல்லது ஒரு மணி என்று தூங்க செல்கின்றனர். அவ்வாறு 11 மணிக்கு மேல் தாமதமாக தூங்க செல்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கின்றது.

தாமதமாக தூங்கினால் என்ன பாதிப்பு?
இரவில் தாமதமாக தூங்கும் போது கல்லீரல் பாதிக்கப்படுகின்றது. ஏனெனில் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை உடலில் வடிகட்டுதல் இயந்திரமாக கல்லீரல் வேலை செய்கின்றது. தாமதமாக தூங்குவதால் நச்சுக்களை நீக்கும் வேலையில் தடைபட்டு செரிமான பிரச்சனை, சோர்வு, முகப்பரு ஏற்படும்.

இரவு 11 மணிக்கு மேல் விழித்திருப்பது மூளை தனது நிறைவாற்றலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆழ்ந்த தூக்கத்தின் போது மூளை அதன் கழிவுகளை கிளிம்பேடிக் அமைப்பு மூலம் சுத்தப்படுத்துகின்றது. தாமதமாக படுப்பதால் மூளைக்கு ஓய்வு கிடைக்காமல், மன அழுத்தம், நினைவாற்றல் இழப்பு ஏற்படுகின்றது.
இரவு தாமதமாக தூங்குவது குடல் செயல்பாட்டை தடுக்கின்றது. செரிமானம் மோசமாவதுடன், ஹார்மோன் சீர் குலைவு, வளர்சிதை மாற்றம் மெதுவாகுதல் போன்ற பிரச்சனையுடன், அமிலத்தன்மை, மலச்சிக்கல் பிரச்சனையும் அதிகரிக்கின்றது.
எந்த நேரத்தில் தூங்க வேண்டும்?
இரவு 10 மணி முதல் 12 மணி வரை ஆழ்ந்த தூக்கம் ஏற்பட்டு உடல் தன்னைத்தானே சரிசெய்கின்றது. ஆகவே இந்த நேரத்தில் கட்டாயம் தூங்கிவிட வேண்டும். குழந்தைகள் 9 மணிக்குள், இளைஞர்கள் 10 மணிக்குள்ளும், பெரியவர்கள் 10.30 மணிக்குள் தூங்க சென்றிட வேண்டும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |