அதிமுக தோல்வியை சந்தித்தது ஏன்? தொண்டர்கள் அவிழ்த்துவிட்ட உண்மை
தமிழக அரசியலில் மாபெரும் கட்சியாக திகழ்ந்து வரும் அதிமுக ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு கட்சிக்குள் பலவித பூசல்களை ஏற்படுத்தி வருகின்றது.
தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இதன் எதிர்கட்சித் தலைவராக யார் இருப்பது என்ற போட்டி ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்குமிடையே ஏற்பட்டது.
ஆனால் ஈபிஎஸ் ஒரே முடிவாக இருந்ததாலும், அவருக்கு ஆதரவாகவே பல தலைவர்கள் இருந்ததால், வேறு வழியின் அரே எதிர்கட்சித் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவால் தான் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததாக கூறி திருநெல்வேலியில் அக்கட்சி தொண்டர்கள் பெயரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதிமுக மானூர் பகுதி தொண்டர்கள் என்கிற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் ஆலோசனையை கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பன்னீர்செல்வத்தின் ஆலோசனையைப் பெறாமல் செயல்பாட்டால் அதிமுக தலைமையகம் முற்றுகையிடப்படும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அதிமுகவில் பரபரப்பும் சர்ச்சையும் கிளம்பியுள்ளது.
இதற்கிடையே சசிகலாவின் ஆடியோ மீண்டும் பரபரப்பினை ஏற்படுத்தி வரும் நிலையில், தொண்டர்களின் இந்த போஸ்டர் கட்சிக்குள் நடக்கும் பூசல்களை வெளிப்படையாக காண்பித்துள்ளது.