Tv Show: அய்யய்யோ நா தப்பு பண்ணிட்டேன்.. ஒரே மிதியில் கதறியழுத்த மாகாபா ஆனந்த்
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “அய்யய்யோ நா தப்பு பண்ணிட்டேன்.." என நடிகை தீபா கொடுத்த அலப்பறை காட்சி வெளியாகியுள்ளது.
அது இது எது சீசன் 4
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் அது இது எது.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய மூன்று சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாகாபா ஆனந்த் இருந்து வருகிறார். பிரபலங்களை அழைத்து அவர்களுக்கு சில டாஸ்க்கள் கொடுத்து, இறுதியாக வெற்றிப் பெற்ற ஜோடிகளுக்கு பாராட்டுக்களும், பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன.
சின்னத்திரை பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வதால் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
கதறியழுத மாகாபா ஆனந்த்
இந்த நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் தாமரை அவருடைய கணவருடன் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு எதிர் அணியில் தீபா அவருடைய கணவருடன் கலந்து கொண்டுள்ளார்.

Viral video: ரீல்ஸ் எடுக்க சென்ற யூடியூபருக்கு நேர்ந்த கதி.. அருவியில் அடித்து செல்லப்படும் காட்சிகள்
தீபா சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நாளாக நாளாக தீபாவுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
இவர், நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தெரியாமல் மாகாபா ஆனந்தின் காலை மிதித்து விடுகிறார்.
மிதி வாங்கியவுடன் வலி தாங்க முடியாமல் மாகாபா ஆனந்த் கதறி அழுகிறார். அத்துடன் தீபா மற்றும் தாமரை அணியில் யார் வெற்றிப் பெறுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |