பிரபல நடிகை வீட்டில் தற்கொலை! சிக்கிய முன்னாள் காதலன்
பிரபல சீரியல் நடிகை வைஷாலி தக்கர் இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை வைஷாலி தக்கர்
இந்தி சீரியல்கள் மூலம் அறிமுகமான அறிமுகமான இவர் அஞ்சலி பரத்வாஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி தக்கர். பின்னர் சூப்பர் சிஸ்டர்,விஸ் ய அம்ரித், மன்மோகினி உள்ளிட்ட பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இவர் இறுதியாக ரக் ஷபந்தன் படத்தில் நடித்திருந்தார். இதில் அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் தோன்றியிருந்தார். படம் மிதமான வரவேற்பை பெற்றிருந்தது.
கென்யா நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவர் அபிநந்தன் சிங்கை திருமணம் செய்வதாக இருந்த நிலையில் கடந்த மாதம் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது.
ஜூன் மாதம் திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனா பல்வேறு காரணங்களால் இவர்களது திருமணம் நிச்சயதார்த்தோடு நின்று போனது. இது குறித்து வைசாலி ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.
தூக்கிட்டு தற்கொலை
இந்நிலையில் வைஷாலி தக்கர் இன்று தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியானது. மத்திய பிரதேசம் இந்தூரில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார் வைஷாலி.
இன்று காலை நீண்ட நேரம் அவரது படுக்கையறை கதவு திறக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்த போது தூக்கிட்டு நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார் வைஷாலி.
பின்பு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அவரது உடலை மீட்ட இடத்திலிருந்து கடிதம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
அதில் தான் தனது முன்னாள் காதலனால் மிகவும் துன்புறுத்தப்பட்டதாகவும், மிகுந்த மன அழுத்ததில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார் வைஷாலி. பின்னர் வழக்கு பதிவு செய்த மும்பை தேஜாஜி நகர் போலீசார்,முன்னாள் காதலனை தேடி வருகின்றனர்.