48 வயதாகும் அம்மாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் மகள்
பிரபல தென்னிந்திய நடிகை சுரேகா வாணியின் மகள், தன்னுடைய அம்மாவிற்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை அமைய வேண்டும் என்பதை பேட்டியில் கூறி இருக்கிறார்.
நடிகை சுரேகா வாணி
திரையுலகில் சுரேகா வாணி கந்த 20 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வரும் பிரபல நடிகையாக உள்ளார். இவர் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து வைத்துள்ளார்.
சில திரைப்படங்களில் கதாநாயகியை விட துணை கதாபாத்திரங்கள் மீது மக்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள்.

அப்படி ஒரு நடிகை தான் நடிகை சுரேகா. இவருக்கு, தற்போது 48 வயதாகிறது. இந்த நிலையில் இவருக்கு மறுமணம் செய்து வைக்க அவருடைய மகள் ஆசைப்படுகிறார்.
சுரேகா வாணி தமிழில் உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, தெய்வத்திருமகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிறந்த நடிகையாக இருப்பவர் தான் சுரேகா வாணி. சுரேகா வாணியின் கணவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சுரேகா வாணியின் கணவர் பெயர் சுரேஷ் தேஜா.

மறுமணம்
இந்த நிலையில் சுரேகா வாணியின் மகள் சுப்ரிதா, தனது நேர்காணல் ஒன்றில் தன் தாய்க்கு மறுமணம் செய்து வைக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.
அதுவும் தன்னுடைய திருமணத்திற்கு முன்னர் தன்னுடைய தாய்க்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவர் கூறி உள்ளார். அதிலும் தன் அம்மாவிற்கு வரப்போகும் மாப்பிளை எப்படி இருக்க வேண்டும் எனவும் அவர் கூறி உள்ளார்.

தன் அம்மாவை அன்பாக பார்த்துக்கொள்ளும் ஒருவர் வேண்டும் என்றும், அவரது விருப்பங்களை மதித்து, அவரது உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கும் ஒருவர் தன் தாய்க்கு துணையாக வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
ஆனாலும் தன்னுடைய தாய் தன் அப்பாவின் இடத்தை யாருக்கும் தரமாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பதை அவர் மதிப்பதாகவும் நேர்காணலில் கூறி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |