வெடித்த சமந்தா நாகசைதன்யா விவாகரத்து பிரச்சினை- 3 மாதத்தில் பிரிந்துவிடுவார்களா? மாமனார் பேசியும் தீராத பிரச்சினை
கடந்த சில நாட்களாகவே நடிகை சமந்தாவும், கணவர் நாகசைதன்யாவும் விவகாரத்து தகவலானது பெரிய சர்ச்சையாகவே சென்று கொண்டிருக்கிறது. இதைப்பற்றி, இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்து வருகின்றனர்.
மேலும், திருமணத்துக்கு பிறகு சமந்தா தனது பெயருக்கு பின்னால் நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை சேர்த்து இருந்தார்.
சமூக வலைத்தளத்திலும் சமந்தா அக்கினேனி என்றே குறிப்பிட்டு இருந்தார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு வலைத்தள பக்கத்தில் அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு எஸ் என்ற ஆங்கில வார்த்தையை மட்டும் குறிப்பிட்டார். இதை வைத்தே இருவரும் பிரியப்போகிறார்கள் என்று பேசப்பட்டது.
இந்நிலையில், தற்போது நாக சைதன்யாவுடன் இல்லை என்றும், 4 மாதங்களாகவே தனியாகத்தான் வசித்து வருகிறார் என்றும், இருவரும் விவாகரத்துக்கு தயாராகி உள்ளனர் என்றும் தெலுங்கு இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், சமந்தாவையும், நாக சைதன்யாவையும் சேர்த்து வைக்க 4 முறை சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தும் விவாகரத்தில் இருவரும் உறுதியாக இருப்பதாக தெலுங்கு பட உலகினர் பேசுகிறார்கள்.
ஏற்கனவே வெளியான தகவலின் படி விவாகரத்து பெறும்பட்சத்தில் சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாகசைதன்யா ரூ.50 கோடி வரை கொடுக்க சம்மதித்து உள்ளதாக ஒரு தெலுங்கு இணையதளம் செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், சமந்தாவுக்கு தன் கெரியர் மீது தான் கவனம். அவர் கவர்ச்சியாக நடிப்பதும், போட்டோஷூட்டுகள் நடத்துவதும் கணவர் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லையாம்..
அந்த போக்கை மாற்றிக் கொள்ளுமாறு பலமுறை சமந்தாவிடம் கூறியும் அவர் கேட்கவில்லை.
மேலும், சமந்தா, நாக சைதன்யா குடும்ப நீதிமன்றத்தில் பலமுறை கவுன்சிலிங் பெற்றும் மனம் மாறவில்லை. அவர்கள் விவாகரத்து பெறுவது உறுதியாகிவிட்டது. அந்த ப்ராசஸ் 2 முதல் 3 மாதங்களில் முடிந்துவிடும் என்றார்கள்.
இதன்பின்னர், தன் மகனின் திருமணம், விவாகரத்தில் முடிந்துவிடக் கூடாது என்று நினைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினாராம் நாகர்ஜுனா. ஆனால் அவர் பேசிப் பார்த்தும் எதுவும் மாறவில்லையாம். நடிப்பில் இருந்து பிரேக் எடுக்கப் போவதாக அறிவித்தார் சமந்தா. இந்நிலையில் அவர் புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்...