விடுதியில் ஒன்றாக இருந்தது ஏன்? 60 வயது நடிகரின் தொடர்பை பற்றி விளக்கிய நடிகை பவித்ரா!
தெலுங்கு நடிகரான நரேஷ் பாபுவை முன்னாள் மனைவி செருப்பால் அடிக்க வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தனக்கும் நரேசுக்கும் இடையில் இருப்பது வெறும் நட்பு மட்டும் தான் என நடிகை பவித்ரா தற்போது தெரிவித்துள்ளார்.
பிரபல குணச்சித்திர நடிகையான பவித்ரா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
செருப்பால் அடிக்க முயற்சி
ஏற்கனவே இவர், சுசீந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து 6 ஆண்டுக்கு பின் பிரிந்து தனியாக வாழ்ந்த நிலையில், பின்னர் நரேஷ் பாபுவை திருமணம் செய்துகொண்டார்.
இதனிடையே, நரேஷ் பாபுவும் பவித்ராவும் ஓட்டலில் ஒரே அறையில் தங்கியிருந்த போது நரேஷ் பாபுவின் மனைவி ரம்யா ரகுபதி அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து செருப்பால் அடிக்க முயன்றுள்ளார்.
அதுமட்டுமின்றி நடிகை பவித்ரா பணத்துக்காக தனது கணவரை 4வது திருமணம் செய்து கொண்டு குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.
பவித்ராவின் கருத்து
இந்த நிலையில், ரம்யாவின் குற்ற சாட்டுகளை மறுத்த பவித்ரா, நான் நரேஷை 4வதாக திருமணம் செய்யவில்லை எனவும், 200 படங்களில் நடித்த நான், அவருடன் 4, 5 படங்களில் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, கணவர் சுசீந்திர பிரசாத்தை நான் திருமணம் செய்யும் போது அவரிடம் பணம் எதுவும் இல்லை. வீடு, கார், இல்லை ஆனாலும் அவருடன் 11 வருடம் வாழ்ந்தேன் என தெரிவித்தார்.
அவரை பிரிந்த பிறகும் தங்களுக்குள் கடந்த 6 ஆண்டுகளாக நல்ல நட்பு இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ள பவித்ரா, நரேஷின் அறிமுகம் கிடைக்கும் போது அவர் மகேஷ் பாபுவின் சகோதரர் என்று தனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
சொந்த விஷயங்களை பேசிக்கொள்வோம்
மேலும், படத்தில் ஒன்றாக பணியாற்றும் போதுதான் நரேஷும், தானும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டதாகவும் வீட்டில் யாரும் இல்லை அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், ரம்யா தேவையில்லாமல் அவரது குடும்ப பிரச்சினையில் தன்னை இழுப்பதாகவும் இதுவரை ரம்யா ரகுபதியை நேரில் பார்த்தது கூட இல்லை என்றும், தனது கணவரிடம் இருந்து தான் விவாகரத்து பெறுவது தன்னுடைய பிரச்சினை என்றும் அதை தானே பார்த்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, தன்னை பற்றி பரவும் வதந்திகள் தொடர்பாக சைபர் கிரைம்மில் புகார் அளித்துள்ளதாகவும் பவித்ரா தெரிவித்துள்ளார்.