Photo Album: நடிகை பார்வதி நாயருக்கு விரைவில் டும் டும்- மாப்பிள்ளை யார் தெரியுமா?
பார்வதி நாயரின் திருமண நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பார்வதி நாயர்
சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் நடிகை தான் பார்வதி நாயர்.
இவர், மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் கன்னடம், தமிழ் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ரவி மோகன் (ஜெயம் ரவி) நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக கெத்தான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் துணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதும் நாமினேட் செய்யப்பட்டது.
நிச்சயதார்த்த படங்கள்
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது.
பார்வதி நாயர் திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளை சென்னையை சார்ந்த தொழில் அதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரோடு தான் இவர்களின் நிச்சயதார்த்தம் முடிவடைந்துகிறது.
இவர்களுடைய திருமண தேதி குறித்து விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |