நடிகை பத்மினியின் ஒரே மகன் இவரா? இப்போது பண்ணும் வேலை இதுதானா?
பிரபல நடிகையும், நாட்டிய பேரொளி பத்மினியின் ஒரே மகனின் புகைப்படம் தற்போது இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகின்றது.
நடிகை பத்மினி
தமிழ் சினிமாவில் சிவாஜி எம்ஜி ஆர் உடன் சூப்பரான நடிகையாக வலம் வந்தவர் தான் நாட்டிய பேரொளி பத்மினி. இவர் நடிப்பு, நடனம், பரதநாட்டியம் என ரசிகர்களை தனது தனித்துவமான கலையால் கட்டிப்போட்டவர் நடிகை பத்மினி.
பத்மினி கதகளி, குச்சிப்புடி, பரதநாட்டியம், மோகினியாட்டம் போன்ற நடனக்கலைகளை கற்று தேர்ந்தவர். தனது 17 வயதில் கல்பனா என்ற இந்தி படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தார்.
சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட பத்மினி, 59 படங்கள் சிவாஜியுடன் சேர்ந்து நடித்தார்.250 படங்களுக்கு மேல் நடித்த நடிகை பத்மினி, தனது நடனத்திற்காகவும், நடிப்பிற்காகவும் பல விருதுகளை தன்வசப்படத்தினார்.
இவர் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். அந்த வகையில் நடிகை பத்மினிக்கு ரே மகன், அவரது பெயர் பிரேம் ஆனந்த். மகனை வளர்ப்பதிலும், குடும்பத்தை பார்த்துக்கொள்வதிலும் கவனத்தை செலுத்தி வந்தார் நாட்டியப்பேரொளி நடிகை பத்மினி.
2006 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் நடிகை பத்மினி. தற்போது நடிகை பத்மினியின் ஒரே மகன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவர் தாயை போல பெரிய ஒரு நடிகராக இடம்பிடிக்கவில்லை. தற்போது இவர் உலகப் புகழ்பெற்ற டைம் ஆங்கில பத்திரிக்கையில் பத்திரிகையாளராகவும், புகைப்பட கலைஞராகவும் வேலை பார்த்தி வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |