உயிருக்கு போராடும் இவருக்காக பிரார்த்தனை பண்ணுங்கள்! சோகத்தில் குஷ்பு வெளியிட்ட பதிவு
நடிகை குஷ்புவின் அண்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்காக பிரார்த்தனை செய்ய ரசிகர்களிடம் வேண்டியுள்ளார்.
நடிகர் குஷ்பு
தமிழ் சினிமாவில் 80களில் கொடி கட்டி பறந்த முன்னணி நடிகை குஷ்பு. தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ள அவர், சின்னத்திரையிலும் கலக்கி வந்தார்.
மேலும் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்த குஷ்பு அரசியலிலும் குதித்தார். அம் தீவிர காங்கிரஸ் கட்சியின் தொண்டராக செயலாற்றி வருகின்றார்.
கணவர் சுந்தர் சி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் குஷ்பு, பிரல ரிவியில் சூப்பர் மாம் சீசன் 3ல் தொகுப்பாளராகவும் இருந்து வருகின்றார்.
சமீபத்தில் இவர் வாரிசு படத்தின் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், இவர் வாரிசு படத்தில் நடிக்கின்றாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதற்கு குஷ்பு மறுப்பு தெரிவித்துள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அண்ணன்
சோசியல் மீட்டியாவிலும் ஆக்டிவ்வாக இருந்து வரும் நடிகை குஷ்பு, தற்போது வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவில், `தனிப்பட்ட நெருக்கடி காரணமாக சிறிது காலம் ஓய்வில் இருந்தேன். எனது மூத்த சகோதரர் உயிருக்கு போராடி வருகிறார்.
கடந்த 4 நாட்களாக ICUவில் சிகிச்சை பெற்று வரும் அவரின் உடல்நிலையில், இன்று சிறிய முன்னேற்றம் காணப்படுகிறது. அவர் குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள் என்று நடிகை குஷ்பு அந்த பதிவில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ரசிகர்களும் உங்களுடைய அண்ணன் விரைவில் குணமடைவார் என்று பதிவிட்டு வருகின்றனர்.
My heartfelt thanks to one and all for your prayers and get well soon wishes for my brother. With so many praying for his recovery, I am very sure he will. #indebted 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
— KhushbuSundar (@khushsundar) December 14, 2022