இலங்கையில் ஆட்டோவில் ஊர் சுற்றிய கீர்த்தி சுரேஷ்- நடு இரவில் வெளியான காணொளி
இலங்கையில் ஆட்டோவில் ஊர் சுற்றிய காணொளியை கீர்த்தி சுரேஷ் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்தார்.
தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
தேசிய விருது வாங்கிய நடிகையான கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருவதாக குடும்பத்தினர் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.
இலங்கை வந்தாரா?
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் ஆண்டனி என்பவரை 15 வருடங்களாக காதலித்து வந்தார்.
இவர்களின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு என்றி கொடுத்த கீர்த்தி, கடை திறப்பு விழாவிற்காக இலங்கை வந்தார். அப்போது, இரவில் ஆட்டோவில் நண்பியுடன் ஊர் சுற்றியுள்ளார்.
இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளியை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ரசிகர்கள் கண்ணில் படவில்லையா?” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
