இது உண்மையிலே முதல் படமா? தாய் கிழவி படம் குறித்த ஜோதிகாவின் பதிவு வைரல்
நடிகர் சிவக்கார்திகேயன் தயாரிப்பில் இன்று வெளியாகியுள்ள தாய்கிழவி திரைப்படம் குறித்து நடிகை ஜோதிக்கா வெளியிட்டுள்ள பதிவு நெட்டிசன்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றது.
தாய்கிழவி திரைப்படம்
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

வயதான பாட்டியின் தோற்றத்தில் ராதிகா நடித்துள்ளார். படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் படம் குறித்து, நகை ஜோதிகா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஜோதிகா தனது பதிவில் குறிப்பிடுகையில், இயக்குனர் சிவகுமார் முருகேசன் இது உண்மையிலே உங்களது முதல் படமா? நம் சமூகத்துக்கு எவ்வளவு முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்கீன்றீர்கள்.
ரொம்ப கண்ணியமாக, நகைச்சுவையுடன்., எளிமையாக அதனை கொடுத்துள்ளது அருமை. ஒரு பெண்ணாக உங்கள் படத்தை பார்ப்பது ரொம்ப பெருமையாக உள்ளது. உங்களுடைய குணத்தை உங்க சிந்தனையே பிரதிபலிக்கிறது.

இவ்வாறு இயக்குனரையே பாராட்டி தள்ளியுள்ளார். தொடர்ந்து தாய் கிழவி படத்தினை தயாரித்துள்ள சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு, சக்திவாய்ந்த திறமைசாலியான ராதிகாவுக்கு ஒரு தகுதியான மேடையை வழங்கியதற்கு நன்றி.
வயது என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணை மையப்படுத்தி இப்படத்தை தயாரித்துள்ளதற்கு அனைத்து நடிகைகள் சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
உங்களின் நட்சத்திர அந்தஸ்தை பயன்படுத்தி பெண்களுக்கு முக்கியமான ஒரு படத்தை தந்ததற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |