இரயில் இருந்து தவறி விழுந்த இளம் நடிகை பரிதாப பலி! தூக்கத்தால் நேர்ந்த சோகம்;
பிரபல இளம் நடிகை ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்தவர் தான் ஜோதி ரெட்டி. ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இவர் ஐதராபாத்தில் வங்கி வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே, ஜோதி ரெட்டி ஆந்திராவில் கொண்டாடப்படும் சங்ரந்தி பண்டிகையை கொண்டாடிவிட்டு ஐதராபாத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது ரயில் பயணத்தின் போது, அசந்து உறங்கியுள்ளார். தூக்க கலக்கத்தில், ஸ்டேஷனில் ரயில் நிற்கின்றது என ஷாட் நகர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது, ரயில் நிலையத்தின் பெயரைக்கண்டதும், தவறான ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டதை உணர்ந்து, மீண்டும் அதே ரயிலில் ஏற முயன்றுள்ளார்.
அந்த நேரத்தில் தவறுதலாக ஏற முயன்றபோது தவறி பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கி பலத்த காயம் அடைந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே பரிதாபமாக ஜோதி ரெட்டி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தால், தெலுங்கு சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.