38 வயதில் திருமணம் செய்த பிரபல நடிகை! புகைப்படத்தால் கூறிய குட் நியூஸ்
பிரபல நடிகை சந்திரா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.
நடிகை சந்திரா
மனசெல்லாம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சந்திரா லட்சுமணன். கேரளாவை சேர்ந்த இவர் ஹோட்டல் நிர்வாக பயிற்சி ஈடுபட்டிருந்த போது இயக்குனர் சந்தோஷ் மூலம் மனசெல்லாம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றதுடன், மலையாள திரையுலகிலும் அறிமுகமானார்.
முன்னதாக ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்வாந்தம் என்னும் மலையாள தொடர் மூலம் தான் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார் இவர். இதையடுத்து மலையாள பிரபல சேனல்களில் ஒளிபரப்பான பல சீரியகளிலும் தோன்றி வந்தார் சந்திரா லட்சுமி.
கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் கங்கவாக நடித்திருந்தார். இதில் நடிகை தேவயானி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

38 வயதில் திருமணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்ட சந்திர லட்சுமி தனது நீண்ட நாள் காதலரான டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் போது இவருக்கு வயது 38. டோஷ் கிறிஸ்டியம் மலையாளத்தில் பிரபலமான சீரியல் நடிகர் ஆவார். ரீல் ஜோடிகள் ஆன இவர்கள் ரியல் ஜோடியான தகவலை தனது சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சந்திரா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.
வளைகாப்பு நடைபெற்ற போட்டோக்களை பதிவிட்டு ஜூனியருக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த பதிவு குறித்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.