43 வயதிலும் நினைவில் நிற்கும் முதல் காதல்... அனுஷ்கா பகிர்ந்த சுவாரஸ்ய நினைவு!
நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது பள்ளிப் பருவத்தில் நடந்த சுவாரஸ்யமான காதல் சம்பவம் ஒன்றை சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.அவரது இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நடிகை அனுஷ்கா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. தனது அழகாலும், நடிப்புத் திறமையாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.

குறிப்பாக, கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பதில் அனுஷ்கா காட்டிய அர்ப்பணிப்பு அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.
ரஜினிகாந்த், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடனும், நாகார்ஜுனா, பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும், தனக்கான தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர் அனுஷ்கா. திரையுலகில் அறிமுகம் 2005-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சூப்பர்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அனுஷ்கா.

அதன் பின்னர் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த அனுஷ்காவுக்கு, ‘அருந்ததி’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், அனுஷ்காவை ஒரு திறமையான நடிகையாகவும் நிலைநிறுத்தியது.

அதன்பிறகு ‘வேட்டைக்காரன்’, ‘சிங்கம்’, ‘லிங்கா’ உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தார்.
அனுஷ்காவின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இந்தப் படத்திற்காக அவர் தனது உடல் எடையை கணிசமாக அதிகரித்து கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஒரு கதாபாத்திரத்திற்காக தனது தோற்றத்தையே மாற்றிக்கொள்ள அனுஷ்கா எடுத்துக்கொண்ட அந்த முயற்சி அப்போது திரையுலகில் பெரிதும் பேசப்பட்டது.
படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், கதாபாத்திரத்திற்காக அவர் செய்த மெனக்கெடல் மற்றும் அர்ப்பணிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பாராட்டைப் பெற்றது.

பிரபாஸ் உடனான திருமண வதந்தி
இதனிடையே, தற்போது 43 வயதாகும் அனுஷ்கா ஷெட்டி இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரது திருமணம் குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக, நடிகர் பிரபாஸும் அனுஷ்காவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக பல ஆண்டுகளாகவே வதந்திகள் பரவி வந்த நிலையில், பின்னர் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்ற செய்திகளும் வெளியானது.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை அனுஷ்கா, தான் 6-ம் வகுப்பு படிக்கும்போது தனக்கு நேர்ந்த முதல் காதல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
அனுஷ்கா குறிப்பிடுகையில, “நான் 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பையன் என்னிடம் வந்து ‘ஐ லவ் யூ’ என்று காதலை சொன்னார். அந்த வயதில் அதற்கு என்ன அர்த்தம் என்று கூட எனக்கு தெரியாது.
ஆனால், அந்த பையன் அதை சொன்னது நான் ஓகே சொல்லிவிட்டேன். அது என் வாழ்க்கையில் அழகான நினைவுகள்” என்று கூறியிருந்தார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |