மயங்கி விழுவதற்கு முன் விஷால் சொன்ன குட் நியூஸ்- கார்த்திக்கு தான் முதலில் தெரியுமாம்..
மயங்கி விழுந்த அன்று காலையில் விஷால் ஒரு பேட்டியில் ஒரு ரகசியத்தை உடைத்து பேசியதுடன், அந்த விடயம் கார்த்திக்கும் தெரியும் எனவும் கூறியிருக்கிறார்.
விஷால்
கடந்த 2004ம் ஆண்டு வெளியான “செல்லமே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் விஷால். இந்த திரைப்படம் விஷாலின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி, அவரது கேரியரில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து விஷால் திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன், பாண்டிய நாடு, பூஜை, மருது, துப்பறிவாளன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளராக கலக்கிய விஷால் துப்பறிவாளன் 2ம் பாகத்தின் மூலம் இயக்குனராக மாறிவிட்டார்.
மயங்கி விழுந்த நாளில் கூறிய குட்நியூஸ்
இந்த நிலையில், நடிகர் விஷால் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் அவரை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருநங்கைகளின் அழகுராணி போட்டிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற போது அங்கு விஷால் மயக்கமடைந்தார்.
இது குறித்து அவர் தரப்பில், “ மதியம் உணவு சரியாக எடுத்துக் கொள்ளாமல் வெறும் பானத்தை மாத்திரம் அருந்தியதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. நலமாக தான் இருக்கிறார்..” என தெரிவிருந்திருந்தார்கள். இதற்கிடையில், காலையில் விழாவுக்கு செல்லும் முன்னர் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்துள்ளார்.
அதில் திருமணம் எப்போது? என கேட்டதற்கு, “கூடிய விரைவில், பொண்ணு எல்லாம் பார்த்துட்டாங்க.. இதனை நான் கார்த்திக்கிட்ட தான் முதலில் கூறினேன்..” என புன்னகையுடன் கூறியிருக்கிறார். “விஷாலின் வெட்கத்தில் அவரின் திருமணம் நாள் எப்போது?” என ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |