தாய், தந்தை மீது கொடுத்த புகார்: மீம் மெட்டிரியலாக மாறிய விஜய் வீட்டு பஞ்சாயத்து
தற்போது இணையத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வு என்னவென்றால் விஜய் தனது பெற்றோர்கள் மீது புகார் அளித்துள்ளது தான். இதற்கு பலரும் கேலி செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் அக்டோபர் 6 முதல் 9ஆம் தேதி என இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அக்டோபர் 12-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு கடந்த 15-ம் தேதியிலிருந்து தொடங்கியுள்ளது.
பல கட்சிகள் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்ற தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில், விஜய்யின் பெயரை மக்கள் இயக்கம் பயன்படுத்தாமல் சுயேச்சையாக போட்டியிடும் என்று நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தனது பெயரையோ தனது இந்த மன்றத்தின் பெயரையே பயன்படுத்துவதை தடை செய்யக்கோரி தனது தந்தை மற்றும் தாய் உட்பட 11 பேர்கள் மீது நடிகர் விஜய் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இந்த மாத இறுதியில் விசாரணைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்து வருகிறது.
ஏற்கனவே விஜய், எஸ் ஏ சியிடம் பேசுவது இல்லை. ஆனால், தற்போது தன் அம்மா மீதும் விஜய் வழக்கு தொடர்ந்து உள்ளது சமூக வலைதளத்தில் பெரும் பேசும் பொருளாகி இருக்கிறது.