விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம்.. வரியை கட்டியதும் பிடிவாதமாக விஜய் விடுத்த கோரிக்கை!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் ஒன்றை வாங்கியிருந்தார்.
அந்த காருக்கு வரி செலுத்தாமல் இருந்ததால், நுழைவு வரி செலுத்த அறுவுறுத்தப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு பெரிய விவாதமான நிலையில், தற்போது இந்த வழக்கில் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று நடிகர் விஜய் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான மீதமுள்ள ரூபாய் 32 லட்சம் தொகையையும் நடிகர் விஜய் தற்போது செலுத்தியுள்ளார்.
இதனால், ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரித்தொகையான மொத்தம் ரூபாய் 40 லட்சத்தையும் விஜய் செலுத்தியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், புஷ்பா சத்யநாராயணா, முகமது ஷஃபீக் மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை ஒத்திவைத்துள்ளனர்.
இந்த கருத்தை திரும்ப பெற வேண்டும் என நடிகர் விஜய் பிடிவாதமாக உள்ளாராம்.