உற்சாகமாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு: வைரலாகும் புகைப்படம்
நடிகர் வடிவேலு படப்பிடிப்பு தளத்தில் வைத்து பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.
நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தடை விதித்து, தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடை, சுமூக பேச்சுவார்த்தைகள் மூலம் நீக்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டு தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வடிவேலு நாய் சேகர் படத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய 61 ஆவது பிறந்தநாளை இவர் கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு வடிவேலு ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் தான் "இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி". இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கிய இப்படம் ரசிகர்களில் தாறுமாறாக ஹிட் அடித்தது.
மீண்டும் '23 ஆம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முன்வந்த இயக்குனர் சிம்பு தேவன். இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். மிக பிரமாண்ட செட் அமைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த போதும், படப்பிடிப்புக்கு வடிவேலு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்று புகார் எழுந்த நிலையில் வடிவேல் மற்ற படங்களில் நடிப்பதற்கு தடை போடப்பட்டிருந்தது.
தற்போது தடை நீங்கியதையடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், இதுகுறித்து பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு, பேட்டி அளித்துள்ளார் வடிவேலு. அதில் 'சினிமாவில் எனக்கு மறுபிறவி. என் மீதான தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது.
தற்போது சுராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் அடுத்த மாதம் முதல் நடிக்கவுள்ளதாகவும், இரண்டு படங்களில் மட்டுமே நாயகனாக நடித்து விட்டு, மீண்டும் காமெடியில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று, 'நாய் சேகர்' படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் தன்னுடைய 61 ஆவது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக வடிவேலுவுக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Wish Youuu Many More Happyy Birthdayy Legend #Vadivelu @actorvijay #HBDVadivelu ❤️💐 pic.twitter.com/3tWNkf7NxM
— #Beast (@BeastFilmOffl) September 12, 2021