நடிகர் பாக்கியராஜை கல்லால் அடிக்க சென்றது ஏன்? பல ஆண்டு கதையை உடைத்த நடிகர் சுந்தர்ராஜன்
நடிகர் பாக்கியராஜ் வந்த காரை கல்லால் அடிக்க முயன்ற நடிகர் சுந்தர்ராஜனின் முன்னாள் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குனர் பாக்கியராஜ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர், நடிகராக வலம் வரும் பாக்கியராஜ், பல படங்களை இயக்கி நடித்துள்ளார்.
இவருடன் இயக்குனராக வேண்டும் என்று சேர்ந்தவர் தான் நடிகர் ஆர். சுந்தர்ராஜன்... ஆனால் சில ஆண்டுகளுக்கு பின்பு இருவரும் பிரிந்த நிலையில், கோபத்தில் சுந்தர்ராஜன் பாக்கியராஜின் காரை கல்லால் அடிக்க முயன்றார்.

பாக்கியராஜின் சிறுவயது நண்பர் தான் நடிகர் சுந்தர் ராஜன். இருவரும் 1974ம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தினை பார்த்து, இயக்குனராக வேண்டும் என சென்னைக்கு வந்துள்ளனர்.
பின்பு பாரதிராஜாவுடன் உதவியளராக இருந்த பாக்கியராஜ், பின்னாளில் உதவி இயக்குனராகவும், நடிகராகவும் வளர்ந்தார். பின்பு இரட்டை இயக்குனராக வர நினைத்து, சுந்தர்ராஜன் யோசித்துக் கொண்டிருந்தார்.
மனம் திறந்த சுந்தர்ராஜன்
சமீபத்தில் சுந்தர்ராஜன் காணொளி ஒன்றில் பேசுகையில், பாக்கியராஜ் உதவி இயக்குனராக இருந்த போது தனக்கு ஒரு கடிதம் எழுதினான் என்றும் அதில் நீ ஊருக்கு போ, நான் இயக்குனராக ஆனதும் என்னை மறுபடியும் கூப்பிடுவதாகவும், ஊருக்கு சென்று தங்கைகளுக்கு திருமணம் செய்து என பக்கம் பக்கமாக எழுதியிருந்தார்.
அதன் சுந்தர்ராஜ் இன்லாண்ட் லெட்டர் ஒன்றினை வாங்கி அதன் நடுவில் நன்றி என மிகப்பெரியதாக எழுதி அனுப்பிவிட்டதாகவும், அதன் பின்பு பாக்கியராஜ் இயக்குனர் நடிகராகவும் மாறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

பாக்கியராஜின் மௌன கீதங்கள் படம் வெளியான போது தன்னிடம் 2 ரூபாய் மட்டும் இருந்தது. அதனை வைத்து சாப்பிட்டாமல் பட்டினியாக அந்த படத்தினை பார்த்தேன்.
தனது நண்பன் நான் இல்லாமலேயே ஜெயித்துவிட்டான் என்றும், இனி அவனுக்கு நான் தேவையில்லை... ஆனால் இதற்கு பின்பு நான் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன்.
கல்லால் அடிக்க சென்றது ஏன்?
அப்பொழுது மௌனகீதங்கள் பார்த்த ஒரு தயாரிப்பாளர் பாக்கியராஜிற்கு, பென்ஸ் கார் ஒன்றினைக் கொடுத்து அடுத்த படத்திற்கு அவரை நடிப்பதற்கு அழைத்துள்ளார்.
தனது நண்பருடன் பாக்கியராஜ் அந்த காரில் வந்து கொண்டிருக்கையில், சுந்தர்ராஜன் தேனாம்பேட்டை நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்பொழுது காரில் சென்ற பாக்கிராஜ் தனது நண்பன் பழனிச்சாமி மூலமாக சுந்தர்ராஜனை அழைத்துள்ளார்.

அப்பொழுது சுந்தர்ராஜன் வர மறுத்துள்ளார். மீண்டும் மீண்டும் சுந்தர்ராஜனை அழைத்த போது தான் கல்லை எடுத்து அடிக்க சென்றாராம்.
அதன் பின்பு பாக்கியராஜ் அவன் வரமாட்டான் நீ வா போகலாம் என்று சொல்லிவிட்டு காரில் கிளம்பினாராம். எந்த சாலையில் தானும், பாக்கியராஜும் பட்டினியாக நடந்து சென்றோமோ? அதே சாலையில் அவன் காரிலும், நான் நடந்தும் சென்றதாக சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |