நடிகர் சிம்புவிற்கு ஏற்பட்ட சோகம்: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிய மாநாடு படம் நாளை திரையில் வெளியாகவிருந்த நிலையில், தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்த இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரிக்கச் செய்தது.
இந்நிலையில் நாளை திரையரங்கில் வெளியாகவிருந்த மாநாடு திரைப்படம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்
— sureshkamatchi (@sureshkamatchi) November 24, 2021
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்