மருத்துவமனையில் இருந்து கொமடி நடிகர் செந்தில் வெளியிட்ட காணொளி.... கொரோனா குறித்து உடைத்த பல உண்மை
காமெடி நடிகர் செந்தில் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனையில் இருந்து காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளியில், எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் யாரும் பயப்பட வேண்டாம். நான் நன்றாக இருக்கின்றேன்.
கொரோனா வந்தால் யாரும் பயப்படத் தேவையில்லை. டெஸ்ட் எடுத்து விட்டு வீட்டில் நீங்கள் தனிமைப்படுத்தி கொண்டு மருத்துவர்கள் கூறும் மருந்து மாத்திரைகளை சரியாக சாப்பிடுங்கள். எனக்கு கொரோனா தடுப்பூசி போட்டதால் அதிக அளவு பாதிப்பு இல்லை.
எனவே நீங்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அந்த ஊசியை போட்டுக் கொண்டால் அனைவருக்கும் நல்லது. அடுத்த டெஸ்ட் விரைவில் எடுக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
டெஸ்ட் எடுத்து முடித்தவுடன் வீட்டிற்கு செல்லலாம் என்றும் அதன்பின் வீட்டில் இருந்தே சிகிச்சையை தொடரலாம் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். எனவே என்னை பற்றி யாரும் பயப்பட வேண்டாம்’ என்று அந்த வீடியோவில் நடிகர் செந்தில் கூறியுள்ளார்.
Veteran Tamil Comedy Actor #Senthil gives an update about his health after his recent #Corona diagnosis..@DoneChannel1 pic.twitter.com/zfrgDTSaza
— Ramesh Bala (@rameshlaus) April 14, 2021