குடும்ப விவகார பத்திரிகையாளர் சந்திப்பு சர்ச்சை: பகிரங்க மன்னிப்ப கோரிய ரவி மோகன்!
நடிகர் ரவி மோகன் குடும்ப விவகார பத்திரிக்ககையாளர் சந்திப்பு குறித்து, தனது செயலுக்கு வறுத்தம் தெரிவிப்பதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் வெளியிட்டுள்ள அறிவிப்பு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
ரவி மோகன் விவாகர்த்து சர்ச்சை
நடிகர் ரவிமோகன், ஆர்த்தி ரவி மற்றும் கெனிஷா ஆகியோருக்கு இடையிலான சர்ச்சை விவகாரத்தில் சமீபத்தில் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து தனது திருமண வாழ்க்கையில் தனக்கு நடந்த மொத்த அநியாயங்களையும் கண்ணீர் மல்க கொட்டி தீர்த்திருந்தார்.இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைவதும் அறிந்தது தான்.

ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில், உள்ள நிலையில், இது குறித்த விடயங்களை பொது வெளியில் பேச கூடாது என இரு தரப்புக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கெனிஷாவை ரவி மோகன் மேடையில் வைத்து கட்டியணைத்தது, மற்றும் மேடை ஏறும் முன் ரவி மோகனின் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்ற காட்சி, இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே, சமூக வலைதளங்களில் தனது பதிவுகளில் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களுக்கு கெனிஷா பதிலடி கொடுத்து வந்தார்.
இதனால் ஆர்த்தி குறித்து கெனிஷா அவதூறாகப் பேசுவதாக குற்றம்சாட்டி, ஆர்த்தி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில், எந்த ஊடகத்திலும் ஆர்த்திக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து, ‘நடிகர் ரவி மோகனின் குடும்பத்தைப் பிரிக்க வந்தவர்’ எனத் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கெனிஷா, இன்ஸ்டாகிராமில் அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் சென்னையை விட்டே வெளியேறுவதாகவும், அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் வெளியேறுவதாகவும் காணொளியை வெளியிட்டுவிட்டு அனைத்தையும் முடிக்கினார்.
அதன் பின்னரே ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்து தன்பக்க நியாயத்தை கண்ணீர் மல்க வெளிப்படுத்தினார்.
[IFZAZI ]
ரவி மோகனின் அந்த பேச்சுக்கு எதிராக, நீதிமன்ற உத்தரவை மீறி அவர் பொதுவெளியில் கருத்து தெரிவித்ததாக ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக ரவி மோகன் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த பகிரங்க மன்னிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மன்னிப்பு அறிவிப்பு
குறித்த அறிக்கையில் ரவி மோகன் கூறியுள்ளதாவது, கடந்த மாதம் குடும்ப வாழ்க்கை மற்றும் விவாகரத்து தொடர்பாக பொதுவெளியில் கூறிய சில கருத்துகள் சிலருக்கு மனவேதனை அளித்திருக்கலாம்.
மேலும், சென்னை உயர்நீதிமன்றம் 23-05-2025 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, நிலுவையில் உள்ள திருமணத் தகராறு வழக்கில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிராக பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், 16-05-2026 அன்று நடைபெற்ற தனது பத்திரிகையாளர் சந்திப்பில் அந்தத் தகராறு குறித்து கருத்து தெரிவித்தது நீதிமன்ற உத்தரவுக்கு முரணானதாக இருந்ததமையை ஒப்புக்கொள்கிறேன் அதனால், நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |