தூக்கில் சடலமாக தொங்கிய பிரபல நடிகர்: பேரதிர்ச்சியில் திரையுலகம்
பிரபல மலையாள டிவி நடிகர் ரமேஷ் வலியசாலா தன் வீட்டில் தூக்கில் சடலமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
மலையாள தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வந்தவர் ரமேஷ் வலியசாலா(54). கேரளாவில் இருக்கும் தன் வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கியது நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
கொரோனா பிரச்சனை காலத்தில் கடும் நிதி நெருக்கடியில் இருந்த ரமேஷ் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தான் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியுள்ளார்.தாராம் ரமேஷ்.
கல்லூரி படிப்பை முடித்ததும் மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கிய இவர் பின்பு பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
ரமேஷ் இறந்த செய்தியை தயாரிப்பாளர் என்.எம். பாதுஷா தான் முதலில் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் மலையாள சின்னத்திரை பிரபலங்கள் பலரும் ரமேஷின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
22 ஆண்டுகளாக பிசியான நடிகராக இருந்த ரமேஷுக்கு இப்படியொரு முடிவு ஏற்பட்டதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.