மறைந்த நடிகர் ரகுவரனின் மகனா இது? ஹூரோ போல ஜொலிக்கிறார்; வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களில் பெயர் போன நடிகர் என்றால் ரகுவரன் தான். எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து படங்களில் நடித்துள்ளார்.
முதலில் மலையாளத்தில் வெளியான காக்கா என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின் தமிழில் தனது திறமையை காட்டி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.
குறிப்பாக, இவர் நடித்த ஒரு சில படங்கள் இப்பொழுதும் கூட ரசிகர்களுக்கு ஃபேவரட் படங்களாக இருக்கின்றன. அந்த வகையில் பாட்ஷா, முதல்வன், ரட்சகன், அமர்க்களம், முத்து, காதலன், ஊர்க்காவலன் நான் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல படங்களில் ரகுவரன் நடித்துள்ளார்.
சினிமாவில் பெரிய அளவில், புகழ் பெற்றாலும் நிஜ வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்பட்டு உள்ளார். இவர், 1996 ஆம் ஆண்டு ரோகினியை திருமணம் செய்து கொண்டார் பின் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இவருக்கு ஒரு மகன் இருக்கிறார் அவரது பெயர் சாய் ரிஷிவரன். ரகுவரனை போலவே அவரது மகனும் ஆள் பார்ப்பதற்கு செம்ம அழகாக இருக்கிறார்.