மகள் பிறந்த மகிழ்ச்சியில் பிரபுதேவா செய்த காரியம்! தீயாய் பரவும் புகைப்படம்
நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தற்போது கோவிலுக்கு சென்று நேர்த்திகடன் செய்து வருகின்றார்.
பிரபுதேவா
தென்னிந்திய சினிமா உலகின் மிகப்பெரிய நடிகராகவும், நடன இயக்குனருமான பிரபுதேவா, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வலம் வருகின்றார்.
இவர் 1995ம் ஆண்டு ராம்லதா என்பவரைத் திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் பிறந்தனர். இதில் மூத்த மகன் விஷால் தனது 12ம் வயதில் 2008ம் ஆண்டு காலமானார்.
பின்பு 15 ஆண்டுகளுக்கு பின்பு தனது மனைவியை விவாகரத்து செய்த பிரபுதேவா, நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் வரை சென்றார். இவரது முதல் மனைவி பிரச்சினை செய்ததால் நயன்தாரா இவரை விட்டு பிரிந்தார்.
நயன்தாராவின் பிரிவிற்கு பின்பு தனியாக வாழ்ந்து வந்த பிரபுதேவாக தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ததாக தகவல் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.
ஆனால் இவர் மருத்துவர் ஒருவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்துள்ளார். ஆம் இவர் முதுகுவலி காரணமாக சில வருடங்கள் அவதிப்பட்ட நிலையில், பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் ஹிமானி சிங் என்பவர் இவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
அவர் மீது காதல் ஏற்பட்ட நிலைியல் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் மனைவியை வெளியே காட்டாமல் இருந்த பிரபுதேவா தனது 50 பிறந்தநாள் போதே வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இந்த தம்பதிகள் பெண்குழந்தை ஒன்றிற்கு அப்பாகியுள்ளது தெரியவந்துள்ளது.
உறுதிப்படுத்திய பிரபுதேவா
இதுகுறித்து பிரபுதேவா கூறுகையில், நீங்கள் கேள்விப்பட்டது உண்மை தான். நான் இந்த வயதில் மீண்டும் தந்தை ஆகியிருப்பது மிகுந்த சந்தோஷமாக இருக்கின்றது. தனது வேலைப்பளுவை ஏற்கனவே குறைத்துவிட்ட இவர் தற்போது மகளுடன் நேரம் செலவிடுவதாக கூறியுள்ளார்.
பிரபுதேவாவின் சொந்த ஊரான கர்நாடக மாநிலம் தொட்டபல்லாப்பூர் என்ற பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பிரபுதேவா சென்று வந்த நிலையில், இப்புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மகள் பிறந்த மகிழ்ச்சியில் கடவுளுக்கு நன்றிகூறி நேர்த்திக்கடனை முடித்துவருவதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.