நான் தந்த காசோலையை வங்கியில் போட்ட அப்பாவி.. நெல்லை சிவா மரணத்திற்கு பார்த்திபன் உருக்கம்!
தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நெல்லை சிவா மாரடைப்பால் நேற்று காலமானார்.
இவரின் இறப்பு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
திருநெல்வேலி பாஷையில் எதார்த்தமாக பேசும் இவரது பேச்சையும் காமெடியையும் ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் கூட்டம் உள்ளது.
இந்நிலையில், இவரின் மறைவுக்கு நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் நெல்லை சிவா குறித்த பதிவு ஒன்றை உருக்கமாக ஷேர் செய்துள்ளார்.
அதில், பாத்திரம் வைத்துக்கொண்டு பிச்சையெடுப்பவனாக இல்லாமல் பாத்திரத்தையே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த என்னிடம் கோடி கோடியாக வந்த பணம் கொண்டு மனம் பல வாங்கினேன்.
நான் தந்த காசோலையை வங்கியில் போட்டு அதை காக்க வங்கி வாசலில் காவல் இருந்த அப்பாவி நெ.சிவா. அவர் பேச நான் சிரிப்பேன். இன்று இல்லை என பதிவிட்டுள்ளார்.
பாத்திரம் வைத்துக்கொண்டு
— Radhakrishnan Parthiban (@rparthiepan) May 11, 2021
பிச்சையெடுப்பவனாக இல்லாமல் பாத்திரத்தையே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த என்னிடம் கோடி கோடியாக வந்த பணம் கொண்டு மனம் பல வாங்கினேன்.நான் தந்த காசோலையை வங்கியில் போட்டு அதை காக்க வங்கி வாசலில் காவல் இருந்த அப்பாவி நெ.சிவா.அவர் பேச நான் சிரிப்பேன்.இன்று இல்லை pic.twitter.com/Lq77ZKWBuT