சத்தமே இல்லாமல் 2ஆவது திருமணம் செய்த கழுகு பட நடிகர்- குவியும் வாழ்த்துக்கள்
விவாகரத்து பெற்று 9 வருடங்களுக்கு பின்னர் கழுகு பட நடிகர் 2-ஆவது திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் கிருஷ்ணா
கடந்த 2008ம் ஆண்டு நீளன் இயக்கத்தில் வெளியான அலிபாபா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கிருஷ்ணா.
இவர், தொடர்ந்து கற்றது களவு, கழுகு, வல்லினம், யாமிருக்க பயமேன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன் சில வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
அதே சமயம், கழுகு திரைப்படத்தில் வரும் “ஆம்பளைக்கும் பொம்பளைக்கு அவசரம்..” என்ற பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அதில் வரும் வரிகள் இன்றும் இளைஞர்கள் மத்தியில் முனுமுனுக்கப்படுகிறது.
திருமணம்
இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா கடந்த 2014-ஆம் ஆண்டு ஹேமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரமாண்டமாக மேட்டுப்பாளையத்தில் நடந்தது.
காதல் மனைவிக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, காரணமாக இருவரும் ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றனர். இதற்கு, “ மனைவி தன்னுடைய கடமையை செய்ய தவறியதோடு, தன்னை சந்தேகப்பட்டு நடிக்க விடாமல் டார்ச்சர் செய்கிறார்.” என கிருஷ்ணா கூறி இருந்தார்.
இதனை தொடர்ந்து விவாகரத்து பெற்று 9 ஆண்டுகளுக்கு பின்னர், தன்னுடைய 47 வயதில் இரண்டாவது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார். கோயிலில் எளிமையாக நடந்து முடிந்த திருமணத்தில் உறவினர்கள் மாத்திரம் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருமணத்தில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து,“புதிய ஆரம்பம்” எனக் குறிப்பிட்டுள்ளார். தம்பதிகளுக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |