கீர்த்தி பாண்டியனின் நிறம் குறித்து கிண்டல் செய்தவர்களுக்கு அசோக் செல்வனின் அழகான பதில்
நடிகர் அசோக் செல்வனும், நடிகர் அருண் பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனும் கடந்த 15ஆம் திகதி திருநெல்வேலியில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டமை அனைவரும் அறிந்மததே.
அதன் பின்னர் அவர்கள் இருவருக்கும் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்தக்களை கூறி வந்த நிலையில் கீர்த்தி பாண்டினின் நிறம் குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் கேலி செய்யும் வகையில் சில கருத்துக்களும் பதிவிடப்பட்டுள்ளன.
இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இது சம்பந்தமாக சில மீம்களும் இணையத்தில் வைரலாக பரவிவருகின்றன.
அசோக் செல்வனின் பதிவு
இந்நிலையில் அசோக் செல்வன் தன் மனைவியை எவ்வளவு நேசிக்கின்றார் என்பதை பரைசாற்றும் வகையில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "With the most beautiful woman in the world" என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் தன் மனைவியை குறைகூறியவர்களுக்கு தக்க பதிலளடி கொடுத்திருக்கின்றார் என இணையதளவாசிகள் குறிப்பிடுகின்றனர். அசோக் செல்வனின் குறித்த பதிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
