பிங்க் நிற சேலையில் அழகு பசுமையாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் காணொளி
நடிகை கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் வகையில் அழகிய சேலையில் செம கியூட்டாக தயாரான காணொளியை தற்போது வெளியிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து , இன்று பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இது என்ன மாயம் திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ரீ கொடுத்த இவர், அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், பைரவா, சர்க்கார், ரெமோ ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தெலுங்கில் உருவான மகாநடி (தமிழில் ‘நடிகையர் திலகம்’)என்ற படத்துக்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் பெற்றார்.
ஹீரோயினாக களமிறங்கி குறுகிய காலத்துக்குள்ளேயே பல சூப்பர் படங்களை கொடுத்து, தனக்கென அழிக்க முடியாத அடையாளத்தையும் தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.
இவருடன் இணைந்து நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் கீர்த்தி சுரேஷ் கடந்த வருடம் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனியை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தின் பின்னரும் சினிமாவில் அதே ஈடுப்பாட்டுடன் பிஸியான நடிகையாக வலம்வருகின்றார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அழகிய பிங்க் நிற சேலையில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |