அது எனக்கு அசிங்கம்! அதிரடியாக கமல் யாரை வெளியேற்றினார் தெரியுமா? கதறி கதறி அழுத பிரியங்கா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று அபிஷேக் வெளியேறியுள்ளார்.
வழக்கமான சஸ்பென்ஸ் ஏதும் வைக்காமல் சட்டென்று ஐக்கியை காப்பாற்றுவதாக சொன்ன கமல், வெளியேற போகிறவர் யார் என்பதற்கான கார்டை கையில் வைத்துக் கொண்டு, அங்கிருந்து எனக்கு சேதி வந்து விட்டது.
மக்களின் தீர்ப்பை தலைவணங்குபவன் நான் எனக் கூறி அபிஷேக்கின் பெயர் உள்ள கார்டினை கேமிரா முன் காட்டினார் . இதை பார்த்து போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பாவனி, அபினய் உள்ளிட்டோர் தங்களிடம் உள்ள காயினை வைத்து அபிஷேக்கை காப்பாற்ற துடித்தனர்.
எவிக்ஷனுக்கும் காயினுக்கும் தொடர்பு இருப்பதாக கமல் கூறினார். அதனால் பொறுமையாக இரு உன்னை மக்கள் வெளியேற்ற மாட்டார்கள். நீ இல்லாமல் வீடு நன்றாக இருக்காது என்றார் நிரூப்.
ஆனால் ஹவுஸ்மெட்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள மறுத்த அபிஷேக், மக்கள் என்னை வெளியே அனுப்ப ஓட்டளித்துள்ளனர். ஒரு காயின் தயவால் நான் தொடர்ந்து இந்த வீட்டிற்குள் இருந்தால் அது எனக்கு அசிங்கம்.
அப்படி இருந்தால் என் சுயமரியாதை, திறமை எல்லாம் என்ன ஆவது என்றார். அதே சமயம் கமல், அபிஷேக்கின் பெயரை அறிவித்ததும் கண்ணீர் விட்டு அழுதார் பிரியங்கா. பாவனி தன்னிடம் உள்ள காயினை எடுத்துக் கொண்டு வந்து, அபிஷேக்கிடம் கொடுத்தார். தொடர்ந்து பிக்பாஸ் ஏதாவது சொல்லுங்க என கேட்டார்.
அப்போது பேசிய பிக்பாஸ், இந்த காயினின் பெயரை இப்போது பயன்படுத்த முடியாது. நாமினேஷனின் போது தான் பயன்படுத்த முடியும் என்றார். இதனால் அபிஷேக் வெளியேற போவதை நினைத்து பிரியங்கா, அபினய் உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுதனர்.
உனக்கு ஏன் மக்கள் ஓட்டளிக்கவில்லை என பிரியங்கா, அபிஷேக்கிடமே கேட்டார். தெரியவில்லை. ஆனால் மக்கள் தீர்ப்பு என்றார் அபிஷேக். அனைவரின் கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் அபிஷேக்.