என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு!
விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் ஆர்த்தி ரவி வெளியிடும் ஒவ்வொரு பதிவும் இணையத்தில் படு வைரலாகி வரும் நிலையில், தற்போது தனது சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து அம்மாவுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
ரவி மோகன்- ஆர்த்தி ரவி
ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் 2024 ஆம் ஆண்டு அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

விரைவில் சட்டப்படி டைவர்ஸ் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பிரிவுக்கு பிறகு கெனிஷாவுடன் ரவி நெருக்கம் காட்டிவரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாக இருந்துவருகிறார்.
ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

ஆர்த்தியை பிரிய வேண்டும் என்பதில் ரவி மோகன் இவ்வளவு பிடிவாதமாக நின்றதற்கு காரணமே, 'அவருக்கு ஆர்த்தியும், அவரது தாயும் கொஞ்சம்கூட மரியாதை கொடுக்கவில்லை என்பது தான் என்பதை ரவி மோகன் பல இடங்களில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது சம்பள பணத்தை எல்லாம் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்' என்று ஒருதரப்பினர் சொன்னார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் ரவியும் தன்னுடைய அறிக்கைகளில் ஆர்த்தியின் தாய் சுஜாதா மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இவ்வாறு ஆர்த்தி மற்றும் ரவிமோகன் விவாகரத்து சர்ச்சையில் ஆர்த்தியின் தாய் பற்றியும் அதிக விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில், இந்த புத்தாண்டில் தனது சிறுவயது புகைப்படத்துடன் ஆர்த்தி ரவி தன் தாய்க்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அம்மாவுக்காக நீண்ட பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் ஆர்த்தி குறிப்பிடுகையில், அம்மா என் கடந்த கால வாழ்க்கையில் நீங்கள் வில்லியாக சித்தரிக்கப்ட்டீர்கள்... ஆனால் நீங்கள் அவமானத்தை விட என் வாழ்க்கைக்க முக்கியத்துவம் கொடுத்தீர்கள் என்பதே உண்மை கர்மா நிச்சயம் பதில் கொடுக்கும் நீதி நிச்சயம் வெல்லும் என குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |