மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும்.. ஆர்த்தி ரவி கொடுத்த ஷாக்
நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி விவாகரத்து கோரியுள்ள தனது கணவர் ரவி மோகன் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் ரவி மோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.
இதற்கிடையே இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நேற்றைய தினத்தில் தனது கடைசி அறிக்கை என்று கூறி மிகப்பெரிய அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இதில் தனது வாழ்க்கையில் மூன்றாவதாக வந்த நபர் தான் இந்த பிரிவிற்கு காரணம் என்றும், ரவி மோகன் செல்லும் போது விலையுயர்ந்த கார் முதற்கொண்டு அனைத்துயும் எடுத்துச் சென்றதாகவும், மேலும் பல விபரங்களை கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆர்த்தி ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றினை செய்துள்ளார். கணவர் ரவி மோகனிடமிருந்து மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜுன் 12ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை ஆர்த்தி அறிக்கையினை அவதானித்த ரசிகர்கள் ஆர்த்திக்கு ஆதரவாக இருந்த நிலையில், தற்போது அவர் கேட்டுள்ள ஜீவனாம்சம் ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |