ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கும் எச்சரிக்கை! ஆபத்தில் இருந்து தப்பிக்க இதோ எளிய பரிகாரம்
ஆகஸ்ட் 17ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை ஆவணி மாதமாகும்.
சிம்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய இந்த மாதத்தில் சில ராசியினர் அற்புத பலன்களைப் பெற்றாலும், சில ராசியினர் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்
கன்னி
உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த காலகட்டத்தில் பல விதத்தில் உடல் நலப்பிரச்னைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் ஏற்படலாம். பணப் பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
மகரம்
மகர ராசிக்கு அஷ்டம ஸ்தானமான ஆயுள், துஸ் ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் நிகழ்கிறது. இதன் காரணமாக உங்களுக்கு சில கடினமான சூழல்கள் ஏற்படலாம்.
இதனால் உங்கள் மன நிலை கலங்கும், மனக்கவலை ஏற்படக்கூடும்.
மகிழ்ச்சியான விஷயங்களையும் அனுபவிக்க முடியாத நிலையில் இருப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
கும்பம்
கும்ப ராசிக்கு தொழில் கூட்டாளி, மனைவி, துணையைக் குறிக்கக்கூடிய இடத்தில் சூரியனின் சஞ்சாரம் நிகழ உள்ளதால் உங்களின் திருமண வாழ்க்கையில் சில ஏற்ற, தாழ்வுகள், சச்சரவுகளைச் சந்திக்க நேரிடும்.
இந்த காலகட்டத்தில் உங்கள் துணைக்கும், உங்களுக்குமிடையே மனஸ்தாபம், கருத்ஹ்டு வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
திருமண முயற்சிகள் தாமதமாக வாய்ப்புள்ளது. உடல் நலம் மற்றும் உடல் தகுதியை பாதிக்கும்.
எளிய பரிகாரம்
சிம்மத்தில் சூரியனின் பெயர்ச்சி காரணமாக ஜாதகத்தில் எதிர்மறை விளைவுகளைக் குறைக்க தினமும் அதிகாலையில் எழுந்து, நீராடி சூரிய வழிபாடு செய்யவும்.
சூரிய பகவான் வலுப்பெற ஜோதிடர்களுடன் கலந்தாலோசித்த மாணிக்க ரத்தினத்தை அணிவது நல்ல பலனைத் தரும்.
சூரியபகவானுக்குரிய ஸ்லோகத்தை உச்சரிக்கவும்.
ஸ்லோகம்
ஓம் ஜபாகுசும சங்காசம்
காச்யபேயம் மகாத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்னம்
ப்ரனதோஸ்மி திவாகரம்