ஈபிள் டவரைவிட அதிக உயரம்! உலகின் முக்கிய பாலமாகியிருக்கும் செனாப் ரயில் பாலத்தின் அழகிய புகைப்படம்!
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள செனாப் பாலத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உதம்பூர் - ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் இணைப்புகளின் முக்கிய வழித்தடமாக விளக்கும் செனாப் பாலம் உலகிலேயே மிகவும் உயரமான ரயில் பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
செனாப் பாலம் ஆற்றுப் படுகையின் மட்டத்திலிருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் நீளம் 1,315 மீட்டராகும். உலக புகழ் பெற்ற காதல் நகரமான பாரிஸில் அமைந்துள்ளா ஈபிள் கோபுரத்தை விட, செனாப் பாலம் 35 மீட்டர்கள் அதிக உயரம் கொண்டது.
120 ஆண்டுகள் வரை உறுதியாக நிற்கும் என கணிக்கப்பட்டுள்ள செனாப் பாலம், 8 ரிக்டர் வரையிலான நிலநடுக்கத்தையும், சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலையும் தாங்கக்கூடியது.
14 மீட்டர் இரட்டை இருப்புப் பாதை மற்றும் 1.2 மீட்டர் அகலமுள்ள மத்திய விளிம்பு ஆகியவற்றைக் கொண்ட இந்த பாலத்தில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் பயணிக்கின்றன.
A sight of the breathtakingly beautiful Chenab Bridge. pic.twitter.com/qpmaUlApCt
— Ministry of Railways (@RailMinIndia) September 13, 2022
1,486 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, இந்த பிரம்மாண்ட பாலத்தின் அற்புதமான காட்சிகள் அடங்கிய போட்டோக்களை இந்திய ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுடன் கூடிய செனாப் பாலத்தின் 4 புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.