ராட்சத அனகொண்டா பாம்புடன் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் நபர்! மெய்சிலிர்க்கும் காட்சி
நபரொருவர் படுக்கையில் பச்சை அனகொண்டா பாம்புடன் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் என்றாலே பெரும்பாலானவர்கள் தலைதெறிக்க ஓடுவார்கள். அதிலும் அனகொண்டா என்றால் சொல்லவும் வேண்டுமா? அமேசான் காடுகளின் அரசனாக வாழும் அனகொண்டாக்கள் உலகின் மிகப்பெரிய பாம்பினங்களில் ஒன்றாக அறியப்படுகின்றது.

இது தொடர்பாக திரைப்படங்களும் ஏராளமாக வெளிவந்துள்ளன. பிரம்மாண்ட தோற்றத்ததால், பீதியை கிளப்பும் அனகொண்டாக்களை பார்த்தால் யாருக்கு தான் பயம் இருக்காது?
ஆனால் அந்த பயத்தையும் மீறி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் அனகொண்டாக்களை பற்றி அறிந்துக்கொள்வதிலும் ஆர்வம் இருப்பது தான் வியப்பான விடயம்.
ஆனால் கொஞ்சமும் அச்சமின்றி நபரொருவர் அனகொண்டா பாம்புடன் படுக்கையில் ஓய்வெடுக்கும் காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |