திருமணமாகி முதலிரவில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி! நடந்தது என்ன தெரியுமா?
மத்திய பிரதேசத்தில் திருமணமான முதல் நாளே கல்யாண பெண் சுவர் ஏறி குதித்து தப்பித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சோனி ஜெயின். இவருக்கு பல ஆண்டுகளாக திருமணம் நடக்காமல் தள்ளி கொண்டே சென்றது.
இதனால் கவலையில் இருந்த சோனிக்கு, உதால் ஹாதிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர், தனக்கு தெரிந்த ஒரு பெண் இருப்பதாகவும், திருமணத்திற்கு 1 லட்ச ரூபாய் வரை செலவாகும் என கூறியுள்ளார்.
சோனியும், இதற்கு சம்மதம் தெரிவித்து ரூ90 ஆயிரம் வரை கொடுத்துள்ளார், தொடர்ந்து அனிதா என்ற பெண்ணுக்கும், சோனிக்கும் திருமணம் நடந்தது.
அன்றிரவு தனக்கு மூச்சுவிட சிரமமாக இருப்பதாக கூறி, அனிதா மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.
வெகு நேரம் ஆகியும் அனிதாவை காணாததால் உறவினர்கள் தேடிப்பார்த்த போது தான், அவர்களுக்கு உண்மை தெரியவந்துள்ளது.
பணத்துக்காக சோனியை ஏமாற்றிவிட்டு, மொட்டை மாடியிலிருந்து அனிதா தப்பிச்சென்று விட்டதும் தெரியவந்துள்ளது.