100 வயது அப்பாவை தாலாட்டும் 70 வயது மகன்! கண்கலங்க வைக்கும் பதிவு
வயதான காலத்தில் தந்தையுடன் பாடி மகிழும் மகனின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடுகளில் இருக்கும் பெரியவர்களின் நிலை
பொதுவாக வீடுகளில் இருக்கும் தாத்தா பாட்டி வயதான காலத்தில் திட்டிக் கொண்டு, அவர்களின் மனதை புண்படுத்தி கொண்டு தான் இருப்பார்கள்.
ஆனால் சில வீடுகளில் மட்டுமே வீட்டிலுள்ள முதியவர்களை தெய்வம் போல் வணங்கி அவர்கள் செய்யும் செயல்களை குடும்ப உறுப்பினர்களுடன் கூறி மகிழ்வார்கள்.
இதன்படி, நூறு வயதாகும் தந்தையுடன் சுமார் 70 வயது மகன், “ பாட்டு பாடவா பார்த்து பேசவா” என்ற பாடலின் வரிகளை பாடி மகிழ்கிறார்கள்.
பாதி பாட்டை அப்பாவுக்காக பாடி கள்ளம் இல்லாமல் சிரிக்கும் அந்த 70 வயது மகனின் சிரிப்பை பார்க்கும் போது நெஞ்சுக்குள்ள ஒரு நிறைவான உணர்வு ஏற்படும்.
இதனை பார்க்கும் போதே வீட்டிலுள்ள முதியவர்களை குழந்தைகள் போல் நடத்தும் குடும்பம் என்று, நாம் வாழும் காலத்தை குழற்தைகளுக்கு அர்ப்பணித்து வீட்டில் வயதான காலத்தில் ரோட்டில் விடப்பட்ட எத்தனையோ மனிதர்களை நாளுக்கு நாள் பார்க்கிறோம்.

முன்மாதிரியான பதிவு
அந்த வகையில் இந்த வீடியோக்காட்சி அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சியை, “செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..” என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “நூறு வயது தந்தைக்கு எழுபது வயதுமகன் பாடல் பாடி உற்சாகப்படுத்தும் காட்சி. தளர்ந்து படுக்கையில் விழும் காலத்தில் அன்பு செலுத்தும் இதைப்போல் பிள்ளைகளைப் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் ❣️?” எனக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், கண்கலங்கியப்படி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
நூறு வயது தந்தைக்கு
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) February 16, 2023
எழுபது வயதுமகன் பாடல் பாடி உற்சாகப்படுத்தும் காட்சி.தளர்ந்து படுக்கையில் விழும் காலத்தில் அன்பு செலுத்தும் இதைப்போல் பிள்ளைகளைப் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் ❣️? pic.twitter.com/giFxBKNa6x